சென்னை,டிச.15- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிசம்பர் 18 அன்று புதுதில்லிக்கு செல்வதாகவும் டிசம்பர் 19 அன்று பிரதமரை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வும் திட்டங்களுக்கான நிதி மற்றும் மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக்கோரி வலியுறுத்துவார் என்றும் கூறப்படுகிறது.